பாக். அமெரிக்கத் தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

கராச்சி:

தீவிரவாதிகளை வளர்த்துவிட்ட பாகிஸ்தானையே தீவிரவாதிகள் தாக்க ஆரம்பித்துள்ளனர்.

நேற்று கராச்சி கல்லூரியின் மீது டாங்கிகளைத் தாக்க பயன்படுத்தப்படும் மிக சக்தி வாயந்த ராக்கெட்டைக்கொண்டு தாக்குதல் நடந்தது. இதில் யாரும் காயமடைவில்லை. கல்லூரிக்கு அருகே உள்ள எல்லைப் பாதுகாப்புப்படையின் தலைமையகத்தைக் குறி வைத்து இந்த ராக்கெட் வீசப்பட்டதாகத் தெரிகிறது. இதன் அருகே தான்அமெரிக்கத் தூதரகம் உள்ளது.

ஆனால், குறி தவறி அது அருகில் உள்ள கல்லூரிக்குள் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து பலத்த சத்தத்துடன்வெடித்துச் சிதறியது. 3 சுவர்களைத் துளைத்துக் கொண்டு இந்த ராக்கெட் உள்ளே நுழைந்தது. இதில் கல்லூரிக்கட்டடம் பலத்த சேதமடைந்தது. அப்போது கல்லூரியில் மாணவர்கள் யாரும் இல்லாதால் உயிர்ச் சேதம் ஏதும்ஏற்படவில்லை.

அமெரிக்கத் தூதரகம் இருப்பதால் இந்தப் பகுதியில் எப்ாதும் மிக பலத்த பாதுகாப்பு இருக்கும். ஆனால்,தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதல் அமெரிக்காவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தீவிரவாதிகள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவமும், கராச்சி நகர போலீசாரும்கூறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலுக்கு உதவி வருவதால் பாகிஸ்தான் மீது தலிபான்களும், அல்-காய்தாதீவிரவாதிகளும் கடும் கோபத்தில் உள்ளனர். இவர்கள் தான் இத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்றுகருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+