தமிழக போலீஸ் நிலையம் மீதான தாக்குதலில் நக்கீரன் நிருபருக்கு தொடர்பு- கர்நாடகம் புகார்
கொள்ளேகால்:
தமிழகத்தில் உள்ள வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தின் மீது வீரப்பன் கும்பல் நடத்திய தாக்குதலில் நக்கீரன்நிருபர் சிவசுப்ரமணியனுக்கு தொடர்பு உள்ளது என்று கர்நாடக போலீஸ் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவரைக் கைது செய்துள்ள கர்நாடக போலீசார் இந்தத் தாக்குதலில் அவரையும் தொடர்புபடுத்திகுற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனை முதன்முதலில் காட்டில் சென்று சந்தித்த முதல் நிருபர் சிவசுப்ரமணியன் தான். கடந்த 2நாட்களுக்கு முன்பு கர்நாடக அதிரடிப்படை போலீசார் தமிழகத்துக்குள் நுழைந்து அவரைக் கைது செய்து சிறையில்வைத்துள்ளனர்.
இந்நிலையில் அவரை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கொள்ளேகால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. சிசுப்ரமணியன் சார்பில் வக்கீல் ஈஸ்வரா சந்திராவும், அரசுசார்பில் வக்கீல் காளிங்கசாமியும் ஆஜராகி வாதாடினர்.
அப்போது, சிவசுப்ரமணியம் தற்போது போலீஸ் காவலில் இருப்பதால் அவரை விடுதலை செய்ய முடியாதுஎன்றும், நீதிமன்றக் காவலுக்கு மாற்றப்பட்ட பிறகுதான் ஜாமீனில் விடுவிக்க முடியும் என்றும் அரசு வக்கீல்வாதாடினார்.
இதற்கிடையில் சிவசுப்ரமணியன் மீதான குற்றப்பத்திரிக்கையை துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தப்பா,இன்ஸ்பெக்டர் மாரி ஷெட்டி ஆகியோர் நேற்று கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
அதில் கூறப்பட்டுள்ள விவரம்:
கடந்த 1998ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள வெள்ளித்திருப்பூரில் உள்ள காவல் நிலையத்தின் மீது சந்தன வீரப்பன்கும்பல் நடத்திய தாக்குதலில் சிவசுப்ரமணியனுக்கும் பங்கு உள்ளது.
இதை அவரே ஒத்துக்கொண்டுள்ளார். அந்த காவல்நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள்புதைத்துவைத்திருந்த இடத்தையும் அவர் அடையாளம் காட்டினார்.
அதன்படி பிலிகிரி ரெங்கனபெட்டா அருகே உள்ள கொங்கனகடவு காட்டுப் பகுதியில் துப்பாக்கிகள், சிலதோட்டாக்கள் மற்றும் 20 ஜெலாட்டின் குச்சிகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
இன்னும் பல வழக்குகளில் இவக்குத் தொடர்பு இருப்பதால், தொடர்ந்து அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இவ்வாறு இன்ஸ்பெக்டர் மாரி ஷெட்டி கூறினார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
சுப்பிரமணியனை விடுவிக்க நிருபர்கள் கோரிக்கை:
இந் நிலையில் சிவசுப்பிரமணியயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோயம்புத்தூர் நிருபர்கள் சங்கம்கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிருபர்கள், உடனடியாக அவர் மீதானபுகார்களை பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications