கொள்ளையடிக்க வந்து செலவுக்குப் பணம் வாங்கி சென்ற கொள்ளையர்கள்
சென்னை:
வீட்டில் பணம் இல்லாததால் கொள்ளையடிக்க வந்தவர்கள் அந்த வீட்டின் உரிமையாளரிடம் மன்னிப்புக்கேட்டுவிட்டு, செலவுக்குப் பணம் வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்த விவரம்:
சென்னை அண்ணாநகரில் வசிப்பவர் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த கிருஷ்ணா ரெட்டி. டாக்டரான இவர்திருப்பதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை ரூ.40 லட்சத்துக்கு விற்றார்.
இந்த விவரம் அறிந்த 4 பேர் முகமூடியுடன் சென்னையில் உள்ள கிருஷ்ணா ரெட்டி வீட்டுக்குள் நுழைந்து, நாங்கள்ஆந்திராவில் இருந்த வந்துள்ள நக்சலைட்டுகள். நீங்கள் வைத்திருக்கும் ரூ.40 லட்சத்தை உடனே எடுத்துக்கொடுங்கள். இல்லாவிட்டால் குத்திக் கொன்றுவிடுவோம் என் கத்தியைக் காட்டி மிரட்டினர்.
டாக்டரும் பீரோ சாவியை எடுத்துக் கொடுத்து, நான் அந்தப் பணத்தை பேங்கில் போட்டுவிட்டேன். பீரோவில்பணம் இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
பீரோவைத் திறந்த பார்த்த கொள்ளையர்கள் பணம் இல்லாததால் டாக்டரின் காலில் விழுந் மன்னிப்புக் கேட்டனர்.பிறகு தங்களுக்கு ஆந்திரா செல்வதற்கு பணம் வேண்டும் என்று கேட்டார்கள். டாக்டரும் தனது பர்ஸை எடுத்துக்கொடுத்துவிட்டார்.
அதிலிருந்த ரூ.5 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
கொள்ளையடிக்க வந்தவர்கள் நக்சலைட்டுகளாக இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் டாக்டரிட்ம் ஏற்கனவேவேலை பார்த்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன்கூறினார்.