ஆட்டோ டிரைவரின் சமயோஜிதம்.. ரயில் தப்பியது
சென்னை:
சென்னை அருதே தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் குறித்து ரயிலின் டிரைவருக்கு ஆட்டோ டிரைவர் உடனடியாகத் தகவல்தந்ததையடுத்து சென்னைக்கு வந்த பயணிகள் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது.
சென்னை அருகே உள்ள அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதை ஆட்டோ டிரைவர் ஒருவர்பார்த்துள்ளார். அப்போது மின்சார ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதையடுத்து உடனடியாக தான் அணிந்திருந்தசட்டையை கழற்றி ரயிலை நோக்கி வேகமாக ஆட்டினார்.
ஒருவர் சட்டையைக் கழற்றி ரயிலை நோக்கி ஆட்டுவதைப் பார்த்த ரயில் டிரைவர் ஏதோ பிரச்சினை என்று நினைத்து ரயிலின் வேகத்தைக்குறைத்து நிறுத்தினார். விரிசல் அடைந்திருந்த தண்டவாளத்திற்கு மிக அருகில் வந்து ரயில் நின்றது. இறங்கிப் பார்த்தபோதுதான் பெரியஆபத்திலிருந்து ரயில் தப்பியது தெரிய வந்தது.
இதையடுத்து டிரைவரும், பயணிகளும் அந்த ஆட்டோ டிரைவரை கைகுலுக்கி பாராட்டினர். நன்றியைத் தெரிவித்தனர்.
தண்டவாளத்தில் விரிசல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.