அல்-காய்தா தீவிரவாதிகளுடன் மோதல்: 35 அமெரிக்க வீரர்கள் பலி?
இஸ்லாமாபாத்:
தெற்கு ஆப்கானிஸ்தானில் நடந்த அல்-காய்தா தீவிரவாதிகளுடன் நடந்த பயங்கர மோதலில் 35 அமெரிக்கராணுவத்தினர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து பாகிஸ்தானின் முன்னணி ஆங்கில நாளிதழான த நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், தெற்குஆப்கானிதானில் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்க சிறப்புப் படையினர் முகாமிட்டுள்ளனர்.இவர்கள் காண்டஹாரை சுற்றியுள்ள பகுதிகளில் பின்லேடனைத் தேடி வருகின்றனர்.
கடந்த 22ம் தேதி பின்லேடனின் அல்-காய்தா தீவிரவாதிகளுக்கும் இந்தப் படையினருக்கும் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. அல்-காய்தா தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன அமெரிக்கப் படையினர்தரப்பினர் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது.
அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தியும் கூட பயன் ஏற்படவில்லை.இதையடுத்து அமெரிக்கப் படையினர் பின்வாங்கினர்.
இந்தத் தாக்குதலில் 35 அமெரிக்க சிறப்புப் படையினர் பலியாகிவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இறந்து போன இந்த வீரர்களின் உடல்கள் பாகிஸ்தானில் உள்ள ஜகோபாபாத் விமானப் படைத் தளத்துக்கு சி-130ரக விமானங்கள் மூலம் கொண்டு வரப்பட்டன.
இந்த மாபெரும் உயிரிழப்புகளால் பென்டகன் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது.
இவ்வாறு த நியூஸ் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications