காஷ்மீர் மோதல்: 6 ராணுவத்தினர், 3 தீவிரவாதிகள் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த சண்டையில் 6 வீரர்கள், 3 தீவிரவாதிகள்மற்றும் ஒரு சிவிலியன் கொல்லப்பட்டனர். மேலும் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் எல்லைக் காவல் படையைச் சேர்ந்தமுகமதுயூசுப், முகமது இக்பால் மற்றும் சுர்ஜித் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ராம் சிங் என்பவரும் கொல்லப்பட்டார். ஐந்துக்கும் மேற்பட்ட எல்லைக் காவல்படை வீரர்கள் படுகாயமடைந்தனர்.
தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க ஜம்மு மற்றும காஷ்மீர் ஆகியவற்றிற்கு இடையில் உள்ள தேசியநெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
இதேபோல அம்மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்தசண்டையில் 3 ராணுவ வீரர்களும், 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஹர்கத்-உல்-ஜிகாதி-இ-இஸ்லாமி, அல்-பாதர் ஆகிய தீவிரவாத இயக்கங்களைச்சேர்ந்தவர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications