சென்னையில் கிரிக்கெட் ரசிகர்கள் போராட்டம்
சென்னை:
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தண்டனையளித்த நடுவர் மைக் டென்னசுக்கு எதிராக சென்னையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர்.
சச்சின் டெண்டுல்கர், கேப்டன் செளரவ் கங்குலி உள்ளிட்ட 6 வீரர்களுக்கு எதிராக நடுவர் அளித்துள்ள இந்தத்தண்டனை கிரிக்கெட் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தண்டனையைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் ரசிகர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான ரசிகர்கள், "மைக் டென்னஸ் டெளன்-டெளன்" என்பதுபோன்ற கோஷங்களை எழுப்பினர்.
இனவெறி காரணமாகவே மைக் டென்னஸ் இந்தத் தண்டனையை அளித்துள்ளதாகவும் கூறி கிரிக்கெட் ரசிகர்கள்கோஷமிட்டனர்.
ஆறு கிரிக்கெட் வீரர்களிடமும் மைக் டென்னஸ் மன்னிப்புக் கேட்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்நடத்தப் போவதாகவும் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications