அம்மாவின் அன்பை இழந்த வளர்மதி ஜெபராஜ்
சென்னை:
பிற்பட்டோர் நிலத்துறை அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். குடும்பத்தகராறு மூலம் கட்சிக்கும், அரசுக்கும் கெட்ட பெயரைத் தேடித் தந்தமைக்காக அவரை பதவியிலிருந்து நீக்க அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்தார் என்று தெரிகிறது.
வளர்மதி ஜெபராஜின் தம்பி மனோகரனுக்கும்,அவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. முன்னாள் பத்திரிக்கையாளர்சண்முக சுந்தரம், வளர்மதியின் தனி உதவியாளராக இருந்து வந்தார். இது மனோகரனுக்குப் பிடிக்கவில்லை.
இந்த மோதல் பெரிதாக வெடிக்கவே, மனோகாரன் தனது கூட்டாளிகளுடன் சண்முக சுந்தரத்தை சரமாரியாக கத்தியால்குத்திவிட்டுத் தலைமறைவானார். இதில் சண்முக சுந்தரம் இரண்டு நாட்களுக்கு முன் மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில்மரணமடைந்தார்.
இந்த சம்பவங்கள் தமிழகத்தையே கலக்கி விட்டன. இதையடுத்து முதலில் கட்சிப் பதவியை இழந்தார் வளர்மதி ஜெபராஜ்.தற்போது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டு விட்டது. ஜெயலலிதா ஆலோசனையின் பேரில் முதல்வர் பன்னீர் செல்வம்ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். இதையேற்று வளர்மதி ஜெபராஜின் பதவி பறிக்கப்பட்டு விட்டது.
மதுரை மேற்குத் தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏவான வளர்மதி ஜெபராஜ் நெல்லை மாவட்டம் திசையவன் விளையைபூர்வீகமாகக் கொண்டவர். 35 ஆண்டுகளுக்கு முன்பே இவரது குடும்பம் மதுரைக்கு வந்து செட்டிலாகி விட்டது.
வளர்மதி ஜெபராஜின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. வளர்மதியை படிக்க வைத்தது ஜெயலலிதாதான். அவருக்கு கல்யாணம்செய்து வைத்ததும் ஜெயலலிதாதான். ஆனால் இப்போது கணவரைப் பிரிந்து வாழ்கிறார் வளர்மதி.
ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளையாக இருந்து வந்த வளர்மதி அவரே எதிர்பாராத விதத்தில் அமைச்சர் பொறுப்புக்குஉயர்த்தப்பட்டார். ஆனால் அமைச்சர் பொறுப்புக்கு வந்த பிறகு அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டது.
அரசு அதிகாரிகளிடம் அடாவடியாக நடந்து கொள்கிறார் என்று புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து அவரை ஜெயலலிதாநேரில் அழைத்து கண்டித்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு அவரின் தம்பி மூலம் பிரச்சினைகள் உருவானது.
ஜெயலலிதாவின் மனதில் இருந்த வளர்மதி ஜெபராஜ் அதைக் கெடுத்துக் கொண்டார். தற்போது அமைச்சர் பதவியையும் இழந்துகட்சி வட்டாரத்தில் கூனிக் குறுகி நிற்கிறார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications