பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
சென்னை:
கடந்த 15 நாட்களாக நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக போக்குவரத்துக்கழக சங்கங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டாக அறிவித்துள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தீவிர ஆலோசனை நடத்தின.
வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று தங்கள் முடிவை இச்சங்கங்கள்அறிவிக்கவிருந்தன.
இந்நிலையில் இன்று போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் நாளையே (திங்கள்கிழமை) வேலைக்குத்திரும்ப முடிவெடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளன.
தமிழக அரசின் நிதி நெருக்கடி, போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் மற்றும்உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அறிவுரை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இந்த போராட்டத்தைவாபஸ் பெற முடிவெடுத்துள்ளதாக போக்குவரத்துக் கழக சங்கங்களின் பிரதிநிதிகள் கூறினர்.