பாகிஸ்தானில் உள்ள தலிபான் அலுவலகத்துக்கு சீல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த தலிபான் ஆதரவு அரசியல் இயக்கத்தின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டு,அங்கு வேலைசெய்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது ஆப்கானில் தலிபான்களின் ஆட்சி முடிவுக்கு வந்ள்ள நிலையில் இவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கைஎடுத்து வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்த தலிபான் தூதரகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
தற்போது டெஹ்ரிக்-ஏ.இஸ்லாமி என்ற இயக்க அலுவலகம் சீல் வைக்கப்பட்டு, அங்கு வேலை செய்த 15 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
தன்னார்வ அமைப்புகளுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள்
இதற்கிடையே வெளிநாட்டிலிருந்து பாகிஸ்தானுக்கு வந்து சமூக சேவை சேவையில் ஈடுபடும் அமைப்புகளின்அதிகாரிகள் யாரும் முறையான முன்னறிவிப்பு இன்றி வரவேண்டம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு சமூக அமைப்புகுகளுக்குஅனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாது,
சில சமூக அமைப்புகளின் தலைவர்களும், அதிகாரிகளும் எங்கள் வெளியுறவுத்துறைக்கு முறையான முன்அறிவிப்புக் கொடுக்காமல் பாகிஸ்தானுக்கு வருகின்றனர். இதனால் அவர்களது பாதுகாப்பு உள்ளிட்ட பலபிரச்சனைகள் எழுகிறது.
மேலும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், ஜெர்மன் அதிபர் ஜெரார்டு ஷ்ரோடர், அமெரிக்க பாதுகாப்புத்துறைஅமைச்சர் டொனால்டு ரம்ஸ்பீல்டு உள்ளிட்ட தலைவர்கள் பாகிஸ்தானுக்கு வந்து ஆப்கானிஸ்தான் நிலைமைகுறித்து ஆலோசனை நடத்த விருக்கிறார்கள்.
எனவே தற்போது குறுகிய கால முன்னறிவிப்பில் யாரும் பாகிஸ்தானுக்கு வரவேண்டாம் என்றுகேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.