அரசு மருத்துவமனைகளில் நவீன ஸ்கேனிங் வசதி: ரூ.87 கோடி ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தமிழகம் முழுவதிலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் ரூ.87 கோடி செலவில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வசதியை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சரோஜா திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஸ்கேனிங் வசதியை ஏற்படுத்த அரசுமுடிவெடுத்துள்ளது. இதற்காக ரூ.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசினர் மருத்துவக் கல்லூரியில், நவீன நுண்கதிர் சிகிச்சைப் பிரிவைஅவர் துவக்கி வைத்தார்.
தமிழகத்திலேயே முதல் முறையாக இங்குதான் இந்த சிகிச்சைப் பிரிவு துவக்கப்படுவதாக நிகழ்ச்சியின்போதுஅமைச்சர் சரோஜா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications