கிருஷ்ணசாமி கைது: 8 தென் மாவட்டங்களில் இன்று புதிய தமிழகம் பந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கைதைக் கண்டித்து திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர்உள்பட 8 தென் மாவட்டங்களில் முழு அடைப்பு நடத்த அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
கொலை வழக்குகள் தொடர்பாக கோவையில் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட டாக்டர்கிருஷ்ணசாமி தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது கைதைக் கண்டித்து புதிய தமிழகம் சார்பில் தென் மாவட்டங்களில் முழு அடைப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகியமாவட்டங்களில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பு அழைப்பையடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் போலீஸார் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications