புதிய தமிழகம் பந்த்: தென் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மதுரை:
தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சியினர் சார்பில் நடத்தப்பட்டு வரும் பந்தினால் தூத்துக்குடி, விருதுநகர்மற்றும் நெல்லை மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் புதிய தமிழகம்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை விடுவிக்கக் கோரி, தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சியினர்பந்த் நடத்திவருகிறார்கள்.
இந்த பந்திற்கு விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பஸ்களும்இயங்காததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அனைத்தும்அடைக்கப்பட்டிருந்தன.
இதேபோல ராஜபாளையத்திலும் காந்தி சிலை மற்றும பஸ் நிலைய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.ஆட்டோக்கள், மினி பஸ்கள் உட்பட எந்த வாகனமும் எதுவும் ஓடவில்லை.
மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications