அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி ஆஜர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

கொலை வழக்குகள் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி, அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மாஞ்சோலை எஸ்டேட்டில் நடந்த இரண்டு கொலை வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு,கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை போலீசார் கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து இவர் தற்போது மதுரை மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரை விடுதலை செய்யக் கோரி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று (செவ்வாய்க்கிழமை) புதியதமிழகம் சார்பில் பந்த நடத்தப்பட்டது.

இந்நிலையில் கிருஷ்ணசாமி இன்று அம்பாசமுத்திரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர்நிருபர்களிடம் கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தற்போதைய அரசு என் மீது பொய்வழக்குகளைப் போட்டு பழி வாங்குகிறது என்றார்.

இதற்கிடையில் இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரும், தேவேந்திர குல வேளாளர்என்ற ஜாதிச் சங்கத்தின் இளைஞர் அணிச் செயலாளருமான பசுபதி பாண்டியன் என்பவரைப் போலீசார் கைதுசெய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் இவரைக் கைது செய்து, தூத்துக்குடி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+