For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாவு எண்ணிக்கை 53 ஆக உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

கடலூர் அருகே கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 பேரின்நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் 247 ஆகஉயர்ந்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட வண்ணம் உள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நத்தம் மற்றும் அருங்குணம் கிராமங்களில் நூற்றுக்கணக்கான விவசாயக்கூலித் தொழிலாளர்கள் வியாழக்கிழமை இரவு கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்தனர்.

சாராயத்தைக் குடித்தவுடனேயே பலர் சுருண்டு விழுந்து இறந்தனர்.

இதில் சாராயம் விற்ற சின்னப் பொண்ணு என்ற பெண் உள்பட மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர்.

நேற்று சாவு எண்ணிக்கை 13ல் ஆரம்பித்து 26 ஆக உயர்ந்தது. இரவிலும் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து சாவுஎண்ணிக்கை 36ஆகிவிட்டது. இன்று காலை மேலும் 10 பேர் இறந்தனர். பகல் 1 மணி வரை சாவு எண்ணிக்கை 53ஆகிவிட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரும் மிகவும் மோசமான உடல் நிலையில் உள்ளனர். இதில் 30 பேர்உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். இவர்களில் பலரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள்தெரிவித்தனர்.

சாராயத்தில் மெத்தனால் கலந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X