ராமநாதபுரம் திமுகவில் உட்கட்சிப் பூசல்: கவுன்சிலர் கார் எரிப்பு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் திமுகவில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக கவுன்சிலரின் கார் எரித்து தீக்கிரையாக்கப்பட்டது.
ராமநாதபுரம் நகரசபையில் நடத்தப்பட்ட நியமனக் குழு உறுப்பினர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 2 பேர்போட்டியிட்டனர். போட்டியிட்டவர்களில் ஒருவரான 21-வது வார்டு திமுக கவுன்சிலில் ராமசுப்பிரமணியம்தோல்வியடைந்தார்.
இதையடுத்து திமுகவில் ராமசுப்பிரமணியம் கோஷ்டியினருக்கும் மற்றொரு கோஷ்டியினருக்கும் உட்கட்சி பூசல்இருந்த வந்தது.
இந்நிலையில் ராமசுப்பிரமணியம் தனது காரில் ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் இவரது காரை மறித்து தீ வைத்துக் கொளுத்திவிட்டது. இதில் கார்முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இதுகுறித்து ராமசுப்பிரமணியம் போலீசில் புகார் செய்தார்.
ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், தாசில்தார் ரவீந்திரன் ஆகிார் இச்சம்பவம் குறித்துவிசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாவட்ட திமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தில் உள்ளது.