தலித் கிராமத்தை சூறையாடிய போலீசார்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில்அவரது கட்சிக்காரர்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து கைது செய்யப்பட்டவண்ணம் உள்ளனர்.

ஆனால், கட்சிக்காரர்களை கைது செய்கிறோம் என்று கூறிக் கொண்டு போலீசார் பல தலித் கிராமங்களை சூறையாடிவருகின்றனர்.

திண்டுக்கல் அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தில் சில தினங்களுக்கு முன் போலீசார் வன்முறைத் தாண்டவம்ஆடினர். இங்கு புதிய தமிழகம் கட்சியின் மாநிலச் செயலாளர் கரிகால் பாண்டியன் மறைந்திருப்பதாகக் கூறிதேடுதலில் இறங்கிய போலீசார் பல வீடுகளில் அத்துமீறி நுழைந்தனர்.

அந்த ஏழை தலித் மக்களின் வீட்டில் இருந்த பாத்திரங்களைப் போட்டு உடைத்த போலீசார் பல பொருள்களைவெளியில் எறிந்தனர். இதனால் பயந்து போன அக் கிராம மக்கள் ஊரைக் காலி செய்துவிட்டு ஓடஆரம்பித்துள்ளனர்.

பெண்கள் வீடுகளுக்குள் செல்லவே அஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பிரச்சனை பெரிதாகிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டதையடுத்துபோலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு வந்து ஊர் பெரியவர்களுடன் பேச்சு நடத்தினர். சமானதமான போய்விட அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

நிலக்கோட்டையில் போலீஸ் அராஜகம்:

இந் நிலையில் மதுரை மாவட்டம் நிலக்கோட்டையிலும் தலித் மக்கள் மீது போலீசார் அடக்குமுறையில்ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் இங்கும் பதற்றம் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+