மதுரை சிறையிலிருந்து 2 கைதிகள் தப்பினர்
மதுரை:
மதுரை மத்திய சிறைச்சாலையில் இருந்து 2 கைதிகள் இன்று அதிகாலை தப்பிவிட்டனர்.
இவர்களில் ஒருவன் பயங்கர கொலைக் குற்றவாளி. மற்றொருவர் கொள்ளைக் கும்பலின் தலைவன்.
கொலைக் குற்றவாளியின் பெயர் பீட்டர். இவன் கொடைக்கானலைச் சேர்ந்தவர். இவர் தனது சொந்த ஊரில்பல்வேறு கொலைகள் தொடர்பாகக் கைதானவர்.
கொள்ளைக் கும்பலின் தலைவன் பெயர் மாரியப்பன். இவன் மதுரையைச் சுற்றி பல்வேறு பெரிய கொள்ளைகளில்தொடர்புடையவன்.
இருவரும் 18 அடி உயரமுள்ள சுவற்றில் ஏறி தப்பிவிட்டதாக போலீசார் கூறுகின்றனர். இவர்கள் தப்பியதாகக்கூறப்படும் இடத்துக்கு மிக அருகில் தான் கண்காணிப்புக் கூடாரம் உள்ளது.
சுமார் 30 அடி உயரமுள்ள இந்த கூடாரத்தின் உச்சியில் ஆயுதம் தாங்கிய போலீசார் 24 மணி நேரமும்கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம்.
இவரையும் மீறி அவர்கள் தப்பியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் தப்பிச் செல்ல போலீசாரே உதவியிருக்கலாமோ என்ற சந்தேகமும் நிலவுகிது.












Click it and Unblock the Notifications