விலை உயர்வு: தமிழகம் முழுவதும் போராட்டம்
திருவாரூர்:
பஸ் கட்டணம், மின் கட்டணம், அரிசி விலை, பால் விலை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் எம்.பி. செல்வராஜ்தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏக்கள் சிவபுண்ணியம், பழனிச்சாமி ஆகியோர் உட்படஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
அதேபோல ஆரணியில் பொதுமக்கள் அனைவரும் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல்அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந் வந்து, சாலை மறியலைக் கவிைடுமாறு பொதுமக்களிடம்பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதேபோல சென்னை, மதுரை, சேலம், திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள்ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications