மேயருக்கே தெரியாமல் ரூ.30 லட்சம் கருவி வாங்கிய சென்னை மாநகராட்சி
சென்னை:
மேயர் ஸ்டாலினுக்கே தெரியாமல் சென்னை மாநகராட்சியின் சராபில் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள தெருவிளக்குகள்பழுது பார்க்கும் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
இன்று காலை சென்னை மாநகராட்சியின் அவைக் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய பல திமுக உறுப்பினர்கள்,சமீபத்தில் மாநகராட்சியின் சார்பில் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள கருவி வாங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தையேமேயரிடம் மறைத்துவிட்டனர்.
இந்தக் கருவி வாங்க மேயரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அனுமதி வாங்காதது ஒரு புறம்இருக்க, அவருக்கு இந்த விஷயத்தையே மறைத்துவிட்டனர். இது அவை விதிகளுக்கு முரணானது.
இந்தக் கருவியை மாநகராட்சி ஆணையரே வாங்கியிருக்கிறார் என்று கூறி கூச்சல் எழுப்பினர். இதற்கு துணைமேயர் கராத்தே தியாகராஜன் தான் காரணம் என்று குற்றம் சாட்டினர்.
திமுக உறுப்பினர்களும் கராத்தா தியாகராஜன் பதிலுக்குக் கூச்சலிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சலும்குழப்பமும் நிலவியது.