அமெரிக்க குண்டு வீச்சில் 200 கிராமத்தினர் பலி
காண்டஹார்:
கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 200 கிராம மக்கள்பலியானார்கள்.
இதில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தபக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
ஆனால் 15 முதல் 20 பேர் வரை மட்டுமே இதில் கொல்லப்பட்டதாக நாங்கர்ஹார் பகுதி பாதுகாப்பு அதிகாரிஒருவர் கூறினார்.
"பொதுமக்கள் இருக்கும் இடங்களில் குண்டு வீசாதீர்கள் என்று நாங்கள் கேட்டுக் கொண்ட உடனே அமெரிக்கவிமானங்கள் தங்கள் தாக்குதலை அப்பகுதியில் நிறுத்தி விட்டன" என்றும் அவர் கூறினார்.
ஆனால் இந்தக் குண்டு வீச்சுச் சம்பவத்தை பெண்டகன் மறுத்துள்ளது.
காண்டஹார் மீது தொடர்ந்து குண்டு மழை
இதற்கிடையே காண்டஹாரில் உள்ள தலிபான்களின் நிலைகள் மீது அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கின்றன.
காண்டஹாரை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளதால்,அமெரிக்க இந்நகரை மிகவும் கடுமையாக தாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் காண்டஹார் மீது அமெரிக்க விமானங்கள் மிகப் பயங்கரமாகக் குண்டு வீசி வருகின்றன.
வேகமாக முன்னேறும் நார்த்தர்ன் அலையன்ஸ்
நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரும் காண்டஹார் நகரை நோக்கி அங்குலம் அங்குலமாக, ஆனால் வெகுவேகமாக முன்னேறி வருகின்றனர்.
காண்டஹார் நகரைச் சுற்றிலும் இப்படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.
தலிபான்களின் நிலைகள் மீது அமெரிக்க விமானங்களும் கடுமையான குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்திக் கொண்டுவருவதால், நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் படு சுறுசுறுப்புடன் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications