அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்: இளங்கோவன்
சென்னை:
நிதிநெருக்கடியைச் சமமாளிக்க மக்கள் வயிற்றில் அடிக்காமல் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன்மூலம் செலவைக் குறைக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
பஸ் கட்டணம், மின் கட்டணம், அரிசி விலை, பால் விலை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையைதமிழக அர உயர்த்தியுள்ளது. அரசின் நிதிநெருக்கடியைச் சமாளிக்க இந்த விலையேற்றம்அமேல்படுத்தப்படுவதாக தமிழக அர அறிவித்தள்ளது.
இந்த திடீர் விலையேற்றத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் வரும் 7ம் தேதி பந்த் நடத்தத்திட்டமிட்டமிட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறுகையில்:
தமிழக அரசின் திடீர் விலையேற்ற அறிவிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தத்திட்டமிட்டுள்ள பந்த்தில் திமுகவும் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு நிதிநெருக்கடியைச் சமாளிக்க வேண்டுமானால் மத்திய அரசிடம் கேட்கலாம். அல்லது தற்போதுள்ளஅமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் வீண் செலவுகளைக் குறைக்கலாம்.
அதை விடுத்த பொதுமக்களின் வயிற்றில் கைவைப்பது அநியாயம். மேலும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த அனைத்து சலுகைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
சட்டசபைக்கு வெளியே இவ்வாறு ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.அதிமுகவினரைப் பொறுத்தவரை சட்டசபை ஒரு பொழுதுபோக்குக் கூடம் தான்.
கடந்த ஆறுமாத கால ஆட்சியில் அதிமுக அரசு, முதலமைச்சரையும், 6 அமைச்சர்களையும் மாற்றியுள்ளது.இதுதான் அதிமுக அரசு செய்துள்ள சாதனை.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
எதிர்கட்சிகள் அறிவித்துள்ள இந்த பந்த்தில் திமுக கூட்டணிணில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி கலந்துகொள்ளமறுத்துவிட்டது. ஆனால், தனியாக தங்களது எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிப்பதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications