மலேசிய சிறையிலிருந்து தப்பிய 15 இந்தியர்கள்
கோலாலம்பூர்:
மலேசிய சிறைக்காவலரைத் தாக்கிவிட்டுத் தப்பிவிட்ட 15 இந்தியர்கள் உட்பட 17 பேரை அந்நாட்டுப் போலீசார்தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இவர்களில் பலர் முறையான விசா இல்லாமல் கள்ளத் தனமாக நாட்டுக்குள் புகுந்து விடுகின்றனர்.
அந்நாட்டுப் போலீசார் இவர்களைக் கண்டறிந்து கைது செய்து தனியாக ஒரு காவல் மையத்தில் அடைத்துவைத்துள்ளனர்.
நெகரி செம்பிலன் மாகாணத்தில் இவ்வாறு 1,000க்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு காவல்மையத்திலிருந்து 15 இந்தியர்களும், 2 பாகிஸ்தானியர்களும் அந்தக் காவல் மையத்தின் காவலரைத் தாக்கிவிட்டுத்தப்பிவிட்டனர்.
இவர்கள் 17 பேரையும் அந்நாட்டுப் போலீசார் தற்போது வலை வீசித் தேடிவருகின்றனர். இதுகுறித்து அப்பகுதிதலைமைப் போலீஸ் அதிகாரி அப்துல் காலித் அபு ஹசன் கூறுகையில்,
தாக்கப்பட்ட காவலருக்குத் தலையிலும், உடம்பு முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவர்அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார்.
அந்த 17 பேரையும் பிடிக்க 40 பேர் கொண்ட தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில்அவர்களைப் பிடித்துத் தக்க தண்டனை கொடுப்போம் என்றார்.
கடந்த 1999ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜூலை வரை மலேசியாவுக்குள் முறையான விசா இல்லாமல் 2,91,500பேர் நுழைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் கண்டறிந்து காவலில் வைக்க அந்நாட்டு அரசு தீவிரமாகஇருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.