புத்தாண்டு முதல் புதிய ரேஷன் கார்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வண்ணங்களில் வழங்கப்படும் ரேஷன் கார்டுகளை நிறுத்திவிட்டு தமிழகத்தில் வரும் புத்தாண்டு முதல்அனைவருக்கும் புதிய ரேஷன் கார்டு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் 1998ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் வண்ண முறையால்பிரிக்கப்பட்டனர். அதன்படி வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு இளஞ்சிவப்பு, நடுத்தரவர்க்கத்தினருக்கு மஞ்சள், மேல் மட்டத்தினருக்கு பச்சை என்று பிரித்து அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட கணக்குப்படி ஒரு கோடியே 61 லட்சத்து 16 ஆயிரத்து 360 ரேஷன்கார்டுகள் உள்ளன.

தமிழக அரசு தற்போது அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கிலோ ரூ.3 வீதம் அரிசியை வழங்கி வருகிறது.

ஆனால் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மத்திய அரசு 97 ஆயிரத்து 256 மெட்ரிக் டன் அரிசியைரூ.5.65 விலையில் வழங்குகிறது. வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கு 38 ஆயிரத்து 440 மெட்ரிக் டன்அரிசியை ரூ.8.30 விலையில் வழங்குகிறது.

இதனால் ஆண்டுக்கு ரூ.265 கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்கபடுகிறது.

எனவே வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டும் கிலோ ரூ.3.50 விலையில் அரிசி மற்றவர்களுக்குரூ.9.00 என்று அரசு அறிவித்துள்ளது.

வண்ண கார்டுகள் முறையில் நடுத்தர வர்க்கத்தினருக்கும், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கும்கார்டுகள் வழங்கப்பட்டதில் பெரும் குளறுபடிகள் நடந்தன. இந்தக் கார்டுகளை ஒழிக்க அரசு தற்போதுமுடிவெடுத்துள்ளது.

போலி கார்டுகளை ஒழிக்கவும், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் மற்றும் நடுததர வர்க்கத்தினரை பிரித்துஅடையாளம் காண்பதற்காகவும் வண்ணங்களில் கார்டுகள் வழங்கப்படுவதை அடியோடு ஒழிக்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் புதிய கார்டுகள் வடிவமைக்கப்பட்டு வரும் புத்தாண்டில் அனைவருக்கும் புதிய ரேஷன் கார்டுவழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+