தூத்துக்குடியில் ஒரே நாளில் 19 பேருக்கு "ஆயுள் தண்டனை" தீர்ப்புகள்
தூத்துக்குடி:
தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஒரே நாளில் பல்வேறு வழக்குகளில் 19 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கிதீர்ப்பளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் வடக்குவண்டானத்தைச் சேர்ந்த தீப்பெட்டித் தொழிற்சாலை அதிபர்களான சரவணன் (35) -துரைப்பாண்டியன் (20) சகோதரர்களை அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தீப்பெட்டி தொழிலதிபர் பொன்னுச்சாமி(35) என்பவர் தன் தம்பிகள் உள்பட 13 பேரின் உதவியுடன் வெட்டிக் கொன்றார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 14 பேரையும் கைது செய்த போலீசார், தூத்துக்குடி மாவட்ட செசன்ஸ்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். சிவப்பிரகாசம் கடந்த வெள்ளிக்கிழமை (நவ.30) அளித்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட 14 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
பொன்னுச்சாமிக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை அவர் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும்என்றும், மற்ற 13 பேரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதே தூத்துக்குடி நீதிமன்றத்தில், அதே நாளில் மேலும் பல்வேறு வழக்குகளில் 5 பேருக்கு ஆயுள் தண்டனைவழங்கப்பட்டது.
இதையடுத்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஒரே நாளில் 19 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்புகூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications