சடலம் ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி 3 பேர் பலி
சேலம்:
சேலம் அருகே சடலத்தை ஏற்றிக் கொண்டு சென்ற ஒரு ஆம்புலன்ஸ் வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கேரளாவைச் சேர்ந்த முகுந்தன் என்பவர் சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய உடல்போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட பிறகு, அவருடைய சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
அந்த ஆம்புலன்ஸ் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டிணத்திற்கு அருகே இன்று அதிகாலை 3 மணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு மரத்தில் மோதியது.
இவ்விபத்தில் ஆம்புலன்சில் வந்த முகுந்தனின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு இறந்தார்.
மேலும் ஏழு பேர் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து சேலம் மாவட்ட போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.