ஜீவஜோதியின் கணவர் உடலைக் கடத்த முயற்சி
கொடைக்கானல்:
சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலின் ஆட்களால் கொலை செய்யப்பட்ட ஜீவஜோதியின் கணவர்சாந்தகுமாரின் உடலை அவர்கள் கடத்தும் முயற்சியிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசப்பட்ட சாந்தகுமாரின் உடல் பெரிய பள்ளத்தில் விழுந்து விட்டதாகத்தான்கொலையாளிகள் நினைத்துள்ளனர்.
ஆனால் 20 அடி ஆழத்தில்தான் பிணத்தைக் கண்டெடுத்தனர் கொடைக்கானல் போலீசார். கொலை செய்யப்பட்டமூன்று நாட்கள் கழித்து அப்பிணத்தைக் கைப்பற்றிய போலீசார், பல்வேறு கோணங்களில் அதைப் புகைப்படம்எடுத்து விட்டு, போஸ்ட்மார்ட்டம் நடந்த பிறகு புதைத்து விட்டனர்.
போலீசாரிடம் பிணம் சிக்கி விட்டதை அறிந்த கொலையாளிகள், கொடைக்கானல் அரசு மருத்துவமனையிலிருந்துசாந்தகுமாரின் உடலைக் கடத்திச் சென்று அழித்து விடத் திட்டம் போட்டுள்ளனர்.
ஆனால், அங்குள்ள டாக்டர்கள் ஒத்துழைக்காத காரணத்தால் அவர்கள் சென்னை திரும்பிவிட்டதாகக்கூறப்படுகிறது.
ஜீவஜோதி கதறல்
இதற்கிடையே சாந்தகுமாரின் பிணம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தோண்டி எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்காக அவருடைய மனைவி ஜீவஜோதி, அவரது தாயார் தவமணி, தந்தை ராமசாமி, மாமாக்கள் முத்தரசு மற்றும்தசமணி ஆகியோர் நேற்று காலை 11.30 மணிக்கு போலீஸ் நிலையம் வந்தனர்.
சாந்தகுமாரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஜீன்ஸ் பேண்ட், சட்டை, பெல்ட் மற்றும் போட்டோக்களைஜீவஜோதியிடம் போலீசார் காட்டினர். அவற்றைப் பார்த்து ஜீவஜோதி கதறி அழுதார்.
கொலையை மறைக்க ஜீவஜோதியே முயற்சி?- போலீசார் சந்தேகம்
சில நாட்களுக்கு முன் சென்னையில் ஜீவஜோதி பேட்டியளிக்கும்போது, "என் கணவருக்கு கருமாதி செய்தது போலசடங்குகளைச் செய்தேன்" என்று தெரிவித்தார்.
அவர் "கருமாதி" என்ற வார்த்தையை அப்போது பயன்படுத்தியதால், தற்போது போலீசார் அவரையும்சந்தேகப்படுகின்றனர். கணவர் சாந்தகுமார் இறந்த விபரம் ஜீவஜோதிக்கு முன்பே தெரிந்திருக்கலாம் என்றுபோலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனால், சாந்தகுமார் கொலை வழக்கில் ஜீவஜோதியும் குற்றவாளியாகச் சேர்க்கப்படலாம் என்று போலீஸ்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாக்குமூலம் கொடுத்தவர் திடீர் பல்டி
இந்நிலையில், சாந்தகுமாரை நாங்கள் கொல்லவே இல்லை. இப்போதுதான் கொடைக்கானலுக்கே முதல் முறையாகவருகிறோம். எல்லாவற்றையும் நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறோம் என்று முக்கியக் குற்றவாளியானடேனியல் நிருபர்களிடம் கூறினார்.
சாந்தகுமாரைக் கொலை செய்த விஷயத்தை போலீசாரிடம் கூறி, உடலை வீசிய இடத்தை அடையாளம்காட்டியவர் டேனியல் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications