பந்த்துக்கு ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை: பாஜக
சென்னை:
கட்டண-விலைவாசி உயர்வுகளை எதிர்த்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தவுள்ள பந்த்தை ஆதரிக்கவும்மாட்டோம், எதிர்க்கவும் மாட்டோம் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் கிருபாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு அறிவித்துள்ள இந்த கட்டண-விலைவாசி உயர்வுகளால் ஏழை-எளிய மக்கள் பெரிதும் பாதிப்புக்குஉள்ளாவார்கள்.
இதை எதிர்த்தும் கண்டித்தும் கம்யூனிஸ்ட், தமாகா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரும் 7ம் தேதி முழு அடைப்புநடத்தப்படும் என்று அறிவித்துள்ளன.
திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும் அதே நாளன்று தனியாக முழு அடைப்பு நடத்தப்படும் என்று இன்றுதிமுக கூறியுள்ளது.
ஆனால் இந்த பந்த்துக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை; எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இதனால் திமுகவுடனான கூட்டணியில் பாஜக தொடர்ந்து இடம் பெறும் என்பதிலும், திமுக-பாஜக உறவில் விரிசல்ஏற்படாது என்பதிலும் சந்தேகமே இல்லை என்றார் கிருபாநிதி.