வருகிறது டிசம்பர் 6: ரயில்களில் பாதுகாப்பு தீவிரம்
சென்னை:
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ம் தேதியையொட்டி முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக தமிழக ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரயில்கள் அனைத்தும் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பிறகே ரயில்கள் கிளம்பிச் செல்லஅனுமதிக்கப்படுகின்றன.
ரயில் நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் முழுமையாக பரிசோதிக்கப்படுகிறார்கள். அவர்கள் வைத்திருக்கும்பொருட்களும் சோதனை செய்யப்படுகின்றன.
ரயில்களில் பார்சலுக்குத் தடை
அடுத்த மூன்று நாட்களுக்கு பார்சல்கள் எதையும் ரயிலில் அனுமதிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
முக்கிய ஊர்களில் ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள ரகசிய கேமராக்கள் மூலம் ரயில் பயணிகள்கண்காணிக்கப்படுகிறார்கள். சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடும் பயணிகளை போலீஸார் தீவிரமாகவிசாரிக்கின்றனர்.
பஸ்களில் தற்போது டிக்கெட் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் ரயில்களில் தற்போது கடுமையானகூட்டம் உள்ளது.
இதை சிலர் பயன்படுத்திக் கொண்டு நாச வேலைகளில் ஈடுபடலாம் என்பதால் போலீஸார் கண்காணிப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications