அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்
சென்னை:
டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலைசெய்யப்பட்டதை அடுத்து, அதிமுகவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட உடனேயே, நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தஅதிமுகவினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.
பின்னர் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியைத்தெரிவித்தனர்.
அதிமுக தலைமை அலுவலகத்திலும் இன்று அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அங்குள்ளஅனைவருக்கும் அதிமுக சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையே சென்னை-போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் குவியத் தொடங்கிய அதிமுகஅமைச்சர்களும், முக்கியத் தலைவர்களும் அவருக்கு பூச்செண்டுகள் கொடுத்தும், இனிப்பு வழங்கியும்வாழ்த்தினார்கள்.
இதேபோல், தமிழகம் முழுவதிலும் உள்ள அதிமுக அலுவலகங்களில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புவழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.