ஆண்டிபட்டியில் ஜெ. போட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைஅடுத்து, ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடப் போவதாக அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதா போட்டியிடுவதற்கு வசதியாகவே ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த தங்கத்தமிழ்ச்செல்வன் சமீபத்தில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

சைதாப்பேட்டை மற்றும் ஆண்டிபட்டி தொகுதிகளில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைத் தேர்தல்நடத்தப்படும் என்று ஏற்கனவே தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தேர்தலில் நிற்பதற்கு ஏற்பட்ட தடைகளைக் கடந்து ஜெயலலிதா தற்போது வந்துள்ளதால், அவர்ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட உள்ளார். டான்சி மற்றும் ஓட்டல் வழக்குகளில் அவர் விடுதலைசெய்யப்படுவதாக வந்த தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, ஆண்டிபட்டியில் போட்டியிடப் போவதாகஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதையடுத்து, அவர் மீண்டும் தமிழக முதல்வராக விரைவில் பதவி ஏற்பார் என்றும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+