அமெரிக்க குண்டு வீச்சில் 100 ஆப்கானியர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தானின் தோரா போரா பகுதியில் அமெரிக்க விமானங்கள் கடந்த 3 நாட்கள் குண்டு வீசித் தாக்குதல்நடத்தியதில் 100 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் 100 பேர் வரை கொல்லப்பட்டனர் என்று ராணுவ கமாண்டர் ஒருவர் கூறினார்.
பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பின் லேடனைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவருக்குக் கடிதம்எழுதியிருப்பதாகவும் அந்த கமாண்டர் கூறினார்.
சரணடைந்த "அமெரிக்க" தலிபான்கள்
இதற்கிடையே சமீபத்தில் சரணடைந்த 80 தலிபான்களில் மூன்று பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதுதெரிய வந்துள்ளது.
இவர்களில் ஒருவர் பெயர் ஜான் பிலிப் வாக்கர் என்று அவருடைய போட்டோவைப் பார்த்து அவருடையபெற்றோர்கள் அடையாளம் காட்டினர். கலிபோர்னியாவைச் சேர்ந்த வாக்கர், முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டதாகக்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications