டான்சி, ஓட்டல் வழக்குகள்: ஜெ. அப்பீல் மீது இன்று முக்கிய தீர்ப்பு
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கவுள்ள டான்சி மற்றும் கொடைக்கானல்பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய தீர்ப்பு வழங்கப்படுகிறது.
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஓட்டல் வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனையும் தனி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்புகளை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை கடந்த அக்டோபர் 1ம் தேதி நீதிபதி தினகர் முன்னிலையில்தொடங்கியது.
அனைத்துத் தரப்பு வாதங்களும் கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தேதிகுறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த இரு வழக்குகள் தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுக்கள்மீதான தீர்ப்பை இன்று காலை நீதிபதி தினகர் வழங்கவுள்ளார்.
டான்சி வழக்கில் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை காரணமாக கடந்த சட்டசபைத்தேர்தலில் அவர் போட்டியிட முடியாமல் போய்விட்டது.
அதனால் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான இன்றைய தீர்ப்பை தமிழகம்மட்டுமல்ல நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications