இது தெய்வத்தின் செயல்: ஜெ.
சென்னை:
இரு வழக்குகளிலிருந்து நான் விடுவிக்கப்பட்டது தெய்வத்தின் செயல் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாகூறினார்.
டான்சி வழக்கு மற்றும் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்குகளிலிருந்து ஜெயலலிதா விடுதலைசெய்யப்பட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்டது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இது தெய்வத்தின் செயல், கடவுளின் கருணை. இவ்வழக்கில் நான் நிரபராதி என்று ஆரம்பத்திலிருந்தே கூறிவருகிறேன். அது இப்போது நிரூபணமாகியுள்ளது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும் என்றும் நான் அப்போது முதலே சொல்லிவருகிறேன்.
தேர்தலில் நிற்காமலேயே முதல்வர் பதவியில் அமருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இருப்பினும்ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன்.
என் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் பொய்யனவை என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துநான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார் அவர்.












Click it and Unblock the Notifications