பிளசன்ட் ஸ்டே வழக்கிலும் ஜெ. விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட கொடைக்கானல் ஓட்டல் பிளசன்ட் ஸ்டேவழக்கிலும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொடைக்கானலில் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் ஓட்டல் கட்ட முதல்வர் ஜெயலலிதா அனுமதி கொடுத்தார் என்றுவழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் ஜெயலலிதா உள்பட ஐந்து பேருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனைவழங்கி தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் மீதான விசாரணை கடந்த நவம்பர் 22ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து மறு தேதிகுறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதி தினகர் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா, அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ்.அதிகாரி எச்.எம். பாண்டே, ஓட்டல் நிர்வாகிகள் மிட்டல் மற்றும் பாளை. சண்முகம் ஆகிய ஐந்து பேரும் விடுதலைசெய்யப்படுவதாக அவர் தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.

அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுகளை சரிவர நிரூபிக்கவில்லை என்பதால், இவ்வழக்கில் தொடர்புடையஅனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தினகர் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+