நாளை ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பு?
சென்னை:
ஜெயலலிதா வியாழக்கிழமை மாலை முதல்வராகப் பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது.
தனக்குத் தடையாக இருந்த டான்சி வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையாகி விட்டார். இதைத் தொடர்ந்து அவர் உடனடியாகமீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என அதிமுக தலைவர்களும் தொண்டர்களும் வற்புறுத்து வருகின்றனர்.
அவர் வியாழக்கிழமை மீண்டும முதல்வராக பதவியேற்கலாம் என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.வியாழக்கிழமை நல்ல நாள் என்று அவருக்கு ஜோதிடர்கள் தேதி குறித்துக் கொடுத்துள்ளதாக பேசிக் கொள்கிறார்கள்.
அதிலும், மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் பதவியேற்க நல்ல சகுனம் என்று ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்துள்ளார்களாம்.அப்படி இல்லாவிட்டால் 7ம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் பதவியேற்கலாம் என்று ஜோதிடர்கள் ஆலோசனைகொடுத்துள்ளார்களாம்.
இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைக்குள் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கருத்துக்கு வலுவூட்டும் விதத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னையிலேயேஇருக்குமாறு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னையை விட்டு அடுத்த இரண்டு நாட்களுக்கு எங்கும் போக வேண்டாம் என்றும் எம்.எல்.ஏ. விடுதியிலேயே இருக்குமாறும்அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீண்டும் பதவியேற்கும் ஜெயலலிதா அமைச்சரவையில் உள்ள 7 அமைச்சர்களை நீக்கவும் முடிவு செய்துள்ளதாகக்கூறப்படுகிறது.