கோட்டையில் அரசு ஊழியர் போராட்டம் தொடர்கிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அரசுக்கு கண்டனம் தெரிவித்து தொடர்ந்து அமைதியானமுறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்தானது, ஆள்குறைப்பு ஆகியவற்றைக் கண்டித்து தலைமைச் செயலகஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று 5-வது நாளாக புதன்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
அரசு ஊழியர்களின் உரிமைகளை ரத்து செய்யக் கூடாது என்பது போன்ற வாசகங்கள் அந்த பேட்ஜில் இடம் பெற்றிருந்தன.
தொடர்ந்து அமைதியான வழியில் தங்களது போராட்டம் நடைபெறும் என்று அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications