போலீஸ் அதிகாரியை தாக்கிய மதானிக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை
கோயம்புத்தூர்:
போலீஸ் அதிகாரியைத் தாக்கிய வழக்கில் கேரள மக்கள் ஜனநாயக கூட்டணி தலைவர் அப்துல் நாசர் மதானிக்கு 2ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கோயம்புத்தூர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 1998ம் ஆண்டு மே 6ம் தேதி கோயம்புத்தார் மத்திய சிறையிலிருந்து மதானியை போலீசார் அழைத்துவரும்போது, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கி அவருடைய சட்டையையும் கிழித்து விட்டார் மதானி.இதுகுறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த கோயம்புத்தூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 3வது நீதிமன்ற நீதிபதி சர்வமங்களா,போலீசாரை தாக்கிய மதானிக்கு 2 ஆண்டு கடுங்காவல் விதித்து தீர்ப்பு அளித்தார்.
ஆனால் மதானி 2 ஆண்டு காலமாக சிறையில் இருப்பதால் அவரது தண்டனை காலம் முடிந்து விட்டது.
ஆனால் கோவையில் 1998ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குஇன்னும் நிலுவையில் இருப்பதால், அவர் தொடர்ந்து சிறை காவலில் வைக்கப்படட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications