அதிமுக கூட்டணி: பல்டியடிக்கும் தேசிய லீக்
சென்னை:
அதிமுக கூட்டணியில்தான் தொடர்ந்து நீடிக்கிறோம். கூட்டணியிலிருந்து விலகி விட்டதாக கட்சித் தலைவர் அப்துல் லத்தீப்பேசியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று இந்திய தேசிய லீக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிஜாமுதீன்கூறியுள்ளார்.
பொடோ சட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பதால் கூட்டணியிலிருந்து விலகுவதாக இக்கட்சித் தலைவர் அப்துல்லத்தீப் சென்னையில் நடந்த ஒருங்கிணைந்த முஸ்லீம்கள் அமைப்புக் கூட்டத்தில் பேசினார். ஆனால் அதை நிஜாமுதீன் இப்போதுமறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்துல் லத்தீப் பொடோ குறித்துப் பேசவில்லை. மேலும், அதிமுககூட்டணியிலிருந்து விலகுவதாகவும் அறிவிக்கவில்லை. இன்னும் அதிமுக கூட்டணியில்தான் நாங்கள் நீடிக்கிறோம்.
இதுதொடர்பாக வெளியாகும் செய்திகள் குறித்து இந்திய தேசிய லீக் கட்சித் தொண்டர்களும், முஸ்லீம் சமுதாய அன்பர்களும்குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.
தேசிய லீக் தலைவர் அப்துல் லத்தீப் நேற்று பேசியதிலிருந்து பல்டி அடித்துள்ளார். அதை தானே மறுக்காமல் தனதுகட்சியின் செய்தித் தொடர்பாளரை விட்டு மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications