For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை திட்டமிட்டபடி பந்த்: எதிர்க் கட்சிகள் உறுதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கட்டண மற்றும் விலைவாசி உயர்வுகளைச் சிறிதளவு தமிழக அரசு குறைத்தாலும், நாளை (வெள்ளிக்கிழமை)திட்டமிட்டபடி முழு அடைப்பு நடைபெறும் என்று திமுக, காங்கிரஸ், தமாகா, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

ஏற்கனவே ரூ.4,500 கோடி அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி விட்டு, தற்போது சிறிதளவு மட்டும் கட்டணம்குறைக்கப்பட்டுள்ளது வெறும் கண் துடைப்புதான்.

கட்டண மற்றும் விலை உயர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி நாளை நடக்கும் முழு அடைப்புக்கு அனைத்துமக்களும் ஆதரவளிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

யானைப் பசிக்கு சோளப்பொரி - இளங்கோவன்:

கட்டண உயர்வுகளில் தற்போது சிறிதளவு குறைக்கப்பட்டிருப்பது, யானைப் பசிக்கு சோளப்பொரி போன்றதாகும்என்றார் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்.

அரசு ஊழியர்களுக்குச் சலுகைகளைக் குறைத்தது பற்றியோ மாணவர்களின் கட்டண உயர்வு பற்றியோ தமிழகஅரசு மூச்சே விடவில்லையே என்றும் கூறிய இளங்கோவன், திட்டமிட்டபடி நாளை பந்த் உறுதி என்றார்.

இதேபோல், திமுக தலைவர் கருணாநிதி, தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரும் திட்டமிட்டபடி நாளை பந்த்நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X