நாளை கொடி நாள்: தாராள நிதியுதவிக்கு பன்னீர் கோரிக்கை
சென்னை:
நாளை (வெள்ளிக்கிழமை) ராணுவ வீரர்களின் கொடி நாள் தினத்தையொட்டி பொதுமக்கள் ராணுவ வீரர்கள் நலநிதிக்கு தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை ராணுவ வீரர்களின் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதிலும் ராணுவ வீரர்களின்பொது நல நிதிக்கு நிதியுதவி செய்யப்படும். கொடி நாள் அன்பளிப்பு என்று இதற்குப் பெயர்.
இந்த நாளையொட்டி முதல்வர் பன்னீர் செல்வம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
ராணுவ வீரர்களின் நலனுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. அவர்களது குடும்பத்தைப் பராமரிப்பது,அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என பல விதங்களில் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இதனால் நமது நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு பொதுமக்கள் தாராளமாகநிதியுதவி செய்ய வேண்டும் என்று பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.