For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊட்டி அருகே 3 ஏக்கர் கஞ்சா தோட்டம் அழிப்பு: ஒருவர் கைது

By Staff
Google Oneindia Tamil News

ஊட்டி:

ஊட்டி அருகே 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சாச் செடிகள் போலீசாரால் எரித்து அழிக்கப்பட்டது.இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊட்டி அருகே புலிக்குண்டா என்ற ஊரில் ஒருவர் கஞ்சா பயிரிட்டிருப்பதாக போலீசாருக்குத் தகவல் வந்தது.இதையடுத்து, வனத்துறை அதிகாரிகளுடன் குறிப்பிட்ட அந்த நிலத்தை போலீசார் கைப்பற்றினர்.

அந்நிலத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பதைக் கண்ட போலீசாரும்வனத்துறையினரும் அதிர்ந்து போயினர். பின்னர் அந்தக் கஞ்சா செடிகள் முழுவதும் எரித்து அழிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்துகைத்துப்பாக்கி, 20 துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் சில வெடி பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.

அவரிடம் மேலும் விசாரித்த போது, எர்ணாகுளம், பெங்களூர், கூடலூர் மற்றும் நீலகிரி ஆகிய ஊர்களைச் சேர்ந்த10 பேர் இங்கு விளைந்த கஞ்சாவை வைத்து வியாபாரம் செய்தது தெரிய வந்தது.

இதற்கிடையே கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எடக்காடு கிராமத்தில் கஞ்சா கடத்த முயன்றதாக தேனி மற்றும்திண்டுக்கல்லைச் சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X