For Daily Alerts
Just In
கரூரில் 2 நாள் பாஸ்போர்ட் முகாம்
திருச்சி:
பாஸ்போர்ட் பெறுபவர்களின் வசதிக்காகவும் அதை வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைப்போக்கவும் கரூர் நகரில் 2 நாட்கள் பாஸ்போர்ட் முகாம் நடைபெறவுள்ளது.
திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் கரூரில் 2 நாட்களுக்கு பாஸ்போர்ட் முகாம் நடத்தப்படவுள்ளது.
இந்த முகாமின்போது கரூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் தொடர்பான தங்களது குறைகளை முகாம்அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க விரும்புவோர் முகாமிலேயே அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து 45 நாட்களாகியும் கிடைக்கப் பெறாதவர்கள், தங்களது குறைகளை இங்குகூறலாம் என திருச்சி பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி அசோகன் தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]