4 மாஜி அமைச்சர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
இன்றைய (வெள்ளிக்கிழமை) பந்த்தின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 முன்னாள் திமுக அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு எதிரே முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் திமுக தொண்டர்கள்,கட்டண-விலைவாசி உயர்வுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.
அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் முன்னாள் எம்.எல்.ஏக்களான பெரியசாமியும்பரணிகுமாரும் அடக்கம்.
இதற்கிடையே மற்றொரு முன்னாள் திமுக அமைச்சரான கோ.சி. மணி கும்பகோணத்தில் சாலை மறியல் செய்யமுயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதேபோல், சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணனும் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர்பொன்முடியும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications