For Daily Alerts
Just In
பந்த்துக்கு இந்து முன்னணி எதிர்ப்பு
நாகப்பட்டினம்:
விலைவாசி உயர்வை எந்த அரசாலும் தவிர்க்க முடியாத நிலையில் அதை எதிர்த்து பந்த் நடத்தும் அரசியல்கட்சிகளுக்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டனம் மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எந்த அரசாலும் விலைவாசி உயர்வைத் தடுக்க முடியாது. நிர்வாகத்தை திறம்பட நடத்த வேண்டுமானால் கட்டண உயர்வு தவிர்க்கமுடியாதது.
இதை பொதுமக்களிடம் விளக்க வேண்டிய அரசியல் கட்சிகளே பந்த் போன்றவற்றை நடத்துவதுகண்டனத்துக்குரியது.
ஓட்டு வங்கி அரசியலுக்காக பல்வேறு மானியங்களை மாநில, மத்திய அரசுகள் வாரி வழங்குவதால் தான் அரசின்நிதி நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றார் அவர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]