பந்த் சட்டவிரோதம்: சென்னை உயர் நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் பந்த்தை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டண மற்றும் விலைவாசி உயர்வுகளைக் கண்டித்து எதிர்க் கட்சிகள் தமிழகத்தில் இன்று முழு அடைப்புக்குஅழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த முழு அடைப்பினால் தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி, இந்த பந்த் சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்தார்.
மேலும், 1998ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த பந்த்தை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications