மாவட்ட தலைநகரங்களில் அமைச்சர்கள்: பந்தை முறியடிக்க தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எதிர்க்கட்சிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தும் பந்தை முறியடிக்க, தமிழகத்தில் உள்ள மாவட்டதலைநகரங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் இன்று பந்த் நடத்துகிறது. இந்த பந்தைமுறியடிக்க தமிழக அரசும், அதிமுக கட்சியும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

முதற்கட்ட நடவடிக்கையாக, உயர்த்தப்பட்ட கட்டணங்களையும் விலைவாசிகளையும் சிறிது குறைத்துப் பார்த்ததுதமிழக அரசு. ஆனாலும் எதிர்க் கட்சிகள் அதைக் கண்டு ஒதுங்கிவிடவில்லை. கட்டாயம் பந்த் நடந்தே தீரும் என்றுஅறிவித்து விட்டன.

இந்த பந்த் வெற்றி பெற்றால் மக்களின் அதிருப்தி வெளிப்படையாகத் தெரிந்துவிடும் என்பதாலும், இந்த பந்த்தைஎப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.

அரசு சார்பிலும் அதிமுக சார்பிலும் இதற்காக தனித்தனியே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பஸ்களை பாதுகாப்பாக இயக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்கவும், அரசுஅலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களுக்கும் கூடுதல் பாதுகாப்புகொடுத்து அவற்றை இயங்கச் செய்யவும் அரசு சார்பில் முழு முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது.

மறு பக்கத்தில், தமிழக அமைச்சர்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.நேற்று இரவே அங்கங்கு போய்ச் சேர்ந்துள்ள அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் சேர்ந்துகொண்டு பந்த்தை முறியடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதற்கிடையே அதிமுக மாவட்டச் செயலாளர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். கடைகளை, அலுவலகங்களையாரேனும் மூடுமாறு சொல்லி வற்புறுத்தினால், நாங்கள் "கவனித்துக்" கொள்கிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+