பிளாஸ்டிக் வேண்டாமே... காஞ்சி கலெக்டர் வேண்டுகோள்
சென்னை:
பிளாடிக் பொருட்களை பயன்படுத்துவதை பொதுமக்கள் முற்றிலும் நிறுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்டகலெக்டர் ராஜாராமன் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அவர் பேசுகையில்இந்த வேண்டுகோளை விடுத்தார். அவர் மேலும் பேசுகையில்,
நமது சுற்றுப்புறம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால், நச்சுத்தன்மை கொண்ட பொருள்அடங்கிய பிளாஸ்டிக்கை அறவே புறக்கணிக்க வேண்டும்.
பல வீண் பொருட்கள் மக்கிப் போய் தாவரங்களுக்கு உரமாகின்றன. ஆனால் இந்த பிளாஸ்டிக்கை ஒன்றுமேசெய்ய முடியாது. அது அப்படியே இருக்கும். எவ்வளவு காலமானாலும் அது மக்கிப் போகாது.
மண்ணுக்குள்ளேயே இருந்து நச்சுத் தன்மை கொண்ட வேதிப் பொருள் மூலம் சுற்றுச் சூழலையும், மண்ணின்தன்மையையும் கெடுத்து விடும்.
மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஆசிரியர்கள் போதிக்க வேண்டும்.இதையும் ஒரு பாடமாக அவர்கள் கருத வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications