For Quick Alerts
For Daily Alerts
Just In
சாலை விபத்தில் பாதிரியார் உள்பட 3 பேர் பலி
சென்னை:
சென்னை ஆவடி அருகே நடந்த சாலை விபத்தில் கிறிஸ்தவ பாதிரியார் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் ஜெக்கோ பிலிப். இவரது சகோதரர் சாபு பிலிப், சகோதரி சுமா பிலிப்.மூன்று பேரும், தங்களது உறவினர் ஒருவருடன் டாடா சுமோ காரில் சென்னை வந்தனர்.
புது ஆவடி சாலையில் அவர்கள் வந்தபோது எதிரே வந்த தண்ணீர் லாரி டாடா சுமோ காரில் மோதியது.
இதில் ஜெக்கோ, சாபு மற்றும் கார் டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சுமா பிலிப் மற்றும்உறவினர் பெனில் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]