எருமை ரூபத்தில் வந்த எமன்: புது மாப்பிள்ளை சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மோட்டார் சைக்கிள் மீது எருமை மாடு மோதியதால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். 3 மாதத்திற்கு முன்தான் திருமணம் ஆனது. இவருக்கு வயது 34.வெள்ளிக்கிழமை அதிகாலையில், தனது மோட்டார் சைக்கிளில் காமராஜர் சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது கண்ணகி சிலை அருகே வந்து கொண்டிருந்த சில எருமை மாடுகள் திடீரென தங்களுக்குள் ஒன்றுடன்ஒன்று மோதிக் கொண்டன.இதில் ஒரு எருமை மாடு ரோட்டில் மிரண்டு ஓடி மோகனின் பைக் மீது மோதியது.
எருமை மாடு மோதிய வேகத்தில் மோகன் கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு அங்கேயே இறந்தார்.












Click it and Unblock the Notifications